மக்கள் விரோத மோடி ஆட்சிக்கு எதிரான, ஜூலை 09 நாடுதழுவிய பொது வேலைநிறுத்தம், நகர்ப்புற – கிராமப்புற முழு அடைப்பாக அமையட்டும்!

ஒன்றிய பாசிச மோடி ஆட்சிக்கு எதிராக அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள், விவசாய தொழிலாளர் சங்கங்கள் ஜூலை 09ம் தேதி அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. நான்கு தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக மத்திய தொழிற்சங்கங்களும் சுதந்திரமான தொழிற்சங்க கூட்டமைப்புகளும் அறிவித்துள்ள அகில இந்திய வேலைநிறுத்தத்தை ஆதரிப்பதென்றும்,  இதன் ஒரு பகுதியாக, விவசாய -கிராமப்புறத் தொழிலாளர்கள், ஏழை மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளுக்காகவும், கார்ப்பரேட் சூறையாடலில் இருந்து வேளாண்மை – விவசாயிகளின் நிலம்…

Read More

தலையங்கம் – அமிழ்ந்து கிடப்பதெல்லாம் அமைதியல்ல!

தமிழ்நாடு சட்டமன்றத்தில், “இங்கு பேசிய அமைச்சர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது  உங்கள் துறையை வளர்த்தெடுத்ததற்கு, உங்களின் திறமை காரணமாக இருந்தாலும் இந்த வளர்ச்சிக்கு அடிப்படையான-முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. அதுதான் மாநிலத்தில் அமைதி! அதற்கு என்னுடைய துறையான காவல்துறைதான் காரணம். தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது, அதனால்தான் வெளி மாநிலத்தவர்கள் இங்கு வந்து கொள்ளையடிக்க வருகிறார்கள்” என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் காவல்துறை மானியக் கோரிக்கையின் போது பேசினார். கொள்ளை நடக்கிறது என்றால் அங்கே அமைதி இல்லை…

Read More

நீதிதுறைக்கு எதிரான பாஜகவின் தீய எதிர்ப்பியக்கத்தை முறியடிப்போம்

அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக மோடி அரசாங்கம் தொடர்ந்து நடத்துகிற போர், இப்போது, அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாவலரான இந்திய உச்ச நீதிமன்றத்துடன் மோதலுக்கு இட்டுச் சென்றுள்ளது. குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், உச்ச நீதிமன்றம் “ஒரு சூப்பர் நாடாளுமன்றம்” போல செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இது வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, மூர்க்கத்தனமாக இழிவுபடுத்துவதன் வெளிப்பாடாக உள்ளது. மேலும், “உச்ச நீதிமன்றத்திற்கு முன்பு நிலுவையில் உள்ள எந்த விஷயத்திலும் முழுமையான நீதி வழங்குவதற்குத் தேவையான எந்தத் தீர்ப்பையும்…

Read More

பவானியில் திருவிழாக் கால வியாபாரிகள் சங்கத் துவக்க நிகழ்வு

ஈரோடு மாவட்டம் பவானியில் 2025 மே 1 அன்று  ஏஐசிசிடியுவுடன் இணைந்த தமிழ்நாடு ஜனநாயக பொதுத் தொழிலாளர் சங்கத்தின்  திருவிழாக் கால வியாபாரிகள் சங்க பிரிவு  துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. ஏஐசிசிடியு ஈரோடு மாவட்டச் செயலாளர் ஜே.பி.கார்த்திகேயன் தலைமை தாங்கினார். ஏஐசிசிடியு கொடியை மூத்த தோழர் முத்து ஏற்றினார். கே. அமுதா மற்றும் கலைவாணி முன்னிலை வகித்தனர். ஜி.பிரியா வரவேற்றுப் பேசினார். ஏஐசிசிடியு மாநில துணைத் தலைவர் ஜி.ரமேஷ் சிறப்புரையாற்றினார். அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின்…

Read More

தேசிய பேரிடர் நிர்வாக அமைப்பு வெப்ப அலை பற்றிய எச்சரிக்கை விடுத்துள்ளது!  தொழிலாளர்களை     பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுத்திட ஏஐசிசிடியு வேண்டுகோள்!

நாடு முழுவதும் கடும் வெயிலின் தாக்கத்தால் இந்த ஆண்டு வெப்ப அலை வீசும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த பின்னணியில் தொழிலாளரின் உயிர், உடல் நலத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி அகில இந்திய தொழிற்சங்க மையக் கவுன்சில், பிரதம மந்திரி, ஒன்றிய தொழிலாளர் அமைச்சர்,தேசிய பேரிடர் மேலாண்மை வாரிய தலைவர் ஆகியோருக்கு விவரமான கடிதங்கள் அனுப்பி உள்ளது. உலக பருவநிலை அமைப்பானது இந்தியாவில் இந்த ஆண்டு வெப்பம் தொழில் மயமாக்கத்திற்கு முந்திய காலத்தை விட…

Read More

பாசிச மோடி ஆட்சிக்கு முடிவுகட்ட ஒன்றுபடுவோம் – போராடுவோம் – வெற்றி பெறுவோம்! ஏஐசிசிடியு (AICCTU) வுடன் எல்டியுசி (LTUC) இணைந்தது

சென்னை அம்பத்தூரில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மே நாள் பொதுக்கூட்டத்திற்கு உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவர் தோழர் பாரதி தலைமை வகித்தார். எல்டியுசி மாநிலத் தலைவர் தோழர் ஏ.எஸ். குமார் முன்னிலை வகித்தார். அவர் கூட்ட நிகழ்வுகளை ஒருங்கிணைத்ததுடன் தோழர் ஜீவாவின் காலுக்க செருப்புமில்லை பாடலை நெகிழ்ச்சியுடன் பாடினார். இடது தொழிற்சங்க மய்யம் (LTUC) அகில இந்திய தொழிற்சங்க மய்யக் கவுன்சிலில் (AICCTU) மே 1, 2025 அன்று இணைந்தது. அது  தொடர்பான இணைப்பு பிரகடனத்தை …

Read More