ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இகக (மாலெ) கண்டனம்!

ஈரானுக்கு எதிராக இஸ்ரேலிய அரசு அண்மையில் நடத்திய இராணுவ தாக்குதலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேஷன் வன்மையாகக் கண்டிக்கிறது. ஜூன் 13ம் தேதி, ஈரான் மக்கள் பயன்பாட்டுக்கான அணுசக்தி கட்டமைப்புகள் பிற உள்கட்டமைப்பு வசதிகள் மீதும் இஸ்ரேல் பெரும் தாக்குதலை நடத்தியுள்ளது. மோதலை அதிகரிக்கும் இந்த பொறுப்பற்ற நடவடிக்கை, இந்த பிராந்தியத்தில் ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை திணிக்க, மேற்கு ஆசியாவை சீர்குலைக்க, பரவலான மோதலைத் தூண்டிவிட அமெரிக்க-இஸ்ரேல் அச்சு மேற்கொள்ளும் திட்டமிட்ட உத்தியின் ஒரு பகுதியாகும். காஸா…

Read More

ஏழை மக்களின் வீடுகளை இடித்துத் தள்ளும் பிஜேபியின் புல்டோசர்கள்

டெல்லியின் பிஜேபி அரசு, ஏழைத் தொழிலாளர்களின் வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்குகிறது. இந்த மூர்க்கத்தனமான புல்டோசர் இயக்கத்தின் ஒரு பகுதியாக ஜங்க்புராவில் உள்ள மதராஸி முகாமை ஜூன் 1, 2025 அன்று இடித்தது. 300 க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் வீடற்றவர்களாகினர். இது டெல்லி நகர்ப்புற குடிசை மேம்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளை முற்றிலும் மீறிய செயலாகும். அதே இடத்தில் மீண்டும் குடியிருப்பதற்கான வசதிகளை வழங்காமல் ஏற்கனவே உள்ள குடிசைகளை இடிப்பதை இந்த விதிமுறைகள் தடை செய்கின்றன.குடிசைகளுக்கு பதிலாக…

Read More

மோடி கால வெளியுறவுக் கொள்கை சர்வதேச அரங்கில் இந்தியாவின் நிலையை முழுமையாக சீர்குலைத்துள்ளது 

‘சிந்தூர் தாக்குதல்’ நடவடிக்கைக்குப் பிறகு, சர்வதேச கருத்தை இந்தியாவுக்கு சாதகமாக திரட்ட 50-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மூத்த அதிகாரிகளையும் கொண்ட நாடாளுமன்ற பிரதிநிதிகளின் ஏழு குழுவினர், 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு இந்தியா திரும்பியுள்ளனர். பிரதிநிதிகளின் இந்த ஏழு குழுக்களில் மூன்று குழுக்களின் தலைவர்கள், அல்லும் பகலும் “தேசவிரோத சக்திகள்” என்று முத்திரை குத்தப்பட்ட, தேசிய ஜனநாயக முன்னணி அல்லாத கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களாவர். பிஜேபியில் ஒரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் கூட…

Read More