திங்கள் சந்தை, நுள்ளிவிளை ஊராட்சிக்கு உட்பட்ட குதிரைப்பந்தி விளையில் அங்கன்வாடி மையத்தில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த மையத்திற்கு கடந்த 2 ஆண்டுகளாக நிரந்தரமாக ஆசிரியர் நியமிக்கப்படவில்லை. இதனால் அருகில் உள்ள அங்கன்வாடி ஆசிரியர் அவ்வப்போது வந்து செல்கிறார். எனவே அங்கன்வாடிக்கு நிரந்தரமாக ஆசிரியர் நியமிக்க வேண்டும். அங்கன்வாடி குழந்தைகள் உடல்நலன் கருதி குடிநீர் வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இகக(மாலெ) சார்பில் 03.04.25 அன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு இப்பகுதியின் இகக(மாலெ) செயலாளர் திலிப் தலைமை வகித்தார். கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜோதிபாசு முன்னிலை வகித்தார். புரட்சிகர இளைஞர் கழக மாவட்ட அமைப்பாளர் அனிட்டா பிரின்சி, இகக(மாலெ) மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து, மாவட்ட குழு உறுப்பினர்கள் சுசீலா, கார்மல் ஆகியோர் பேசினர். மாவட்ட கமிட்டி உறுப்பினர்கள் அர்ஜூணன், பாலையா, ஜஸ்டின் சுந்தர், செல்வராஜ், சாந்தி, வசந்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.